TRINITY CHURCH

TRINITY CHURCH
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பரி.திருத்துவ ஆலயத்தில் வருகிற மே 3ம் தேதி ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. அனைவரும் வருக... ஆசீர்வாதம் பெறுக...

நாடா புயல் எச்சகை

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகள் கணக் கெடுப்பு

ஆண்ட்ராய்டு போனில் பேட்டரி பராமரிப்பு

சாத்தான்குளம் ஜமீன் வரலாறு தயாராகிவிட்டது

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

செய்தித்தாள் மூலம் நம் மாவட்ட தகவல்களை வெளி உலகுக்கு பரப்புரை செய்துவரும் நமது உலகம் நவீன கால மாற்றத்துக்கு ஏற்ப டிஜிட்டல் வடிவமைப்பிலும் கவனம் செலுத்துகிறது.

நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை: கிணறுகளுக்கு சீல்

Friday 28 April 2017

பணம் என்னடா பணம் பணம்... உயிருள்ள நாட்களை பயன்படுத்திக்கொள்...

மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்
கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? (லூக்கா 9 :25)

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார். அப்போது அவரது ஒரு காலில் செருப்பு பிய்ந்துபோனது.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா நான் நடந்து வரும்போது  என் செருப்பு பிய்ந்துவிட்டது. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.

அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...
ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய மனிதர்..! ஒன்னும் பிரச்சனையில்ல! நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தர் இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. முன்பொருநாள் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது திடீரென நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..
ஏய்யா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

அவ்வளவுதாங்க வாழ்க்கை!
ஒரு பிய்ந்த செருப்புக்கு கிடைக்கும் மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது. வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்... ... இது புரியாம பலபேர்
நான் பெரியவன், அதிகாரம் உள்ளவன், அல்லாமல்  சாதி, மத கலவரங்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியும் செய்கின்றனர்.

கிறிஸ்தவங்களா வாழும் ஒவ்வொருவரும் வாழும் நாட்களில் தன்னைத்தான் கெடுத்துக்கொள்ளாமல், நம்மை முழுதாய் தேவனிடம் கொடுத்து வாழ்ந்தால், நம் ஆத்துமாவை ஆதாயப்படுத்திக்கொள்வோம்! *காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்! - அப்படின்னா என்ன? அது கோதுமைக்குச் சொன்னதா? உடம்புல மூச்சுக்காத்து உள்ளபோதே, ஆன்மீகத்தில் பாவம் நீக்கி பயனடைந்துகொள் என்பதல்லவா அது?* ஆமென்!

Thursday 27 April 2017

ஆன்லைன் மாய உறவுகள்...

என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? (எரேமியா 2:6)

கர்த்தர் கொடுத்த ஞானத்தைப்பெற்ற சாலொமோன் உலகத்தை முழுதாய் ஆராய்ந்து பார்த்து சுமார் 35 முறைகள் மாயை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். *உலக ஞானியாம் சாலொமோனுக்கு உலகம் எல்லாம் மாயையாய்த் தெரிந்தது! அந்தோ, ஆவிக்குரிய ஞானிகள் என்று சொல்லிக்கொள்வோருக்கு உலகம் எல்லாம் மகிழ்ச்சியாய்த் தெரிகிறது!* எல்லாருமே மாயையான உலக காரியங்களில் மனதைப் பறிகொடுத்து, லயித்து இன்பம் அனுபவிக்கிறார்கள். அந்த இன்பத்தில் இறைவனை மறந்துபோய்விடுகிறார்கள்.

குடும்பம், நண்பர்கள், ஆலய உறவுகளைத் தாண்டி மாயையான ஆன்லைன் உறவுகளுக்குள் சிக்கி, அவர்களது தொடர்புகளுக்காக, அன்புகளுக்காக, லைக்குகள், கமெண்டுகளுக்காக ஏங்குகிறார்கள்! ஒரு மனிதன் அவசரநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கையில் பாருங்கள், ஆன்லைன் உறவுகள் வருவதில்லை! மருத்துவமனை படத்தை பதிவேற்றம் செய்தால், வழக்கம்போல சில உச் கொட்டும் கமெண்டுகள் வரலாம். சிலர் மரித்தேபோனாலும், RIP கமெண்டுகள் வரும். அவ்வளவுதான். கண்ணீர் விடவும், கல்லறை காரியத்துக்கும் சுற்றுப்புறம் வேண்டும் அல்லவா?  ஆன்லைனின் புது நண்பிகளோ, அழகாய் தோன்றும் சகோதரிகளோ, வாலிபர்களோ ஒருபோதும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படி உதவும் ஒரு சிலர் அமையப்பெற்றால் ஆச்சரியமே!

கர்த்தர் உங்களுக்கேற்ற உறவாக தாய்-தந்தையர், கணவன்- மனைவி, குழந்தைகள், சகோதரன்-சகோதரி, பக்கத்துவீட்டு உறவுகள், ஆலய உறவுகள், பள்ளி, கல்லூரி உறவுகள் என்று நிறைய கொடுத்துள்ளார். அவற்றை விட்டுவிட்டு மாயையான உறவுகளைப் பின்பற்றுதல், நமக்கே தெரியாமல், சிக்கவைத்து, சின்னபின்னமாக்கி, ஆண்டவரை விட்டு தூர அழைத்துச்சென்றுவிடும்! அவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்!

பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். (யோனா 2:8)
எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யான உறவாக நம் பரமதகப்பன் இருக்கவேண்டும்! கிருபை வீணாவது தெரிவதில்லை. அந்த மாயையான சங்கிலிகளில் இருந்து விடுதலையாகவேண்டியது தேவை! ஆண்டவரிடம் அநியாயம் இல்லையே! இன்றுவரை மாறாத அன்புதான் உண்டு! 

Saturday 22 April 2017

ரேணியஸ் ஐயர் - வாழ்கை வரலாறு - சிறு குறிப்பு

ரேணியஸ்
ரேணியஸ் ஐயர் 5 நவம்பர் 1790 – 5 ஜூன் 1838.
இளமைப்பருவம்

திருநெல்வேலியின் அப்போஸ்தலன் சார்லஸ் தியோபிளஸ் எவால்டு ரேணியஸ் 5 நவம்பர் 1790 மேற்கு ரஷ்யாவில் உள்ள மேரியன்பெர்டேர் என்கிற ஊரில் பிறந்தார். தனது 6வது வயதில் தந்தையை இழந்தார். 14ம் வயதில் தன் தாய்க்கு உதவ வேலை தேடி எழுத்தர் வேலையில் சேர்ந்தார். ஊதியம் போதவில்லை. இதை அறிந்த இவரின் பெரியப்பா தன் பண்ணையில் ஈடுபடுத்தி தன்னோடு வைத்துக்கொண்டார். ரேனியசோ ஆத்மீக விஷயத்தில் அக்கறையில்லாதவராக இருந்தார்.

இரட்சிப்பின் அனுபவம்

தனது பெரியப்பா வீட்டில் காணப்பட்ட பக்தி வாழ்க்கை அவரை சிந்திக்க வைத்தது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு தன்னை ஒப்புகொடுத்தார்.

ஊழிய அழைப்பும் அர்ப்பணிப்பும்

தேவனால் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டார். மிகுந்த போராட்டத்தின் மத்தியில் கர்த்தருடைய பரம தரிசனத்திற்கு கீழ்ப்படிந்து கர்த்தருக்காக எதாகிலும் செய்ய வேண்டுமே என்கிற ஆவல் கொண்டார் அர்ப்பணித்தார். அந்நாட்காளில் அவர் அதிகமாய் விரும்பி வாசித்தது இந்தியாவில் தரங்கம்பாடியிலுள்ள மிஷனரிகளின் அறிக்கைகளாகும். அதை வாசிக்க வாசிக்க அவருக்குள்ளும் மிஷனெரி தாகம் பற்றிக்கொண்டது, அதனால் கிறிஸ்துவை அறியாத மற்ற தேசங்களுக்கு அவரை அறிவிக்க வேண்டும் என்கிற தாகம் உண்டாயிற்று. இதை குறித்து தன் பெரியப்பாவிடம் தெரிவித்தார். அப்பணிக்கு இறைக்கல்வி முக்கியம் என்று அறிந்து அதற்குரிய ஆயத்தத்தை செய்தார். இதை அறிந்த பெரியம்மா இவரின் இருதயத்தை மாற்ற முயன்று தோற்றுப்போனார். குடும்பப்பணிகளை விட மிஷனெரி பணி முக்கியமா என்று கேட்டார். ரேணியஸ் உடைந்து போனார். அம்மாவும் கடல் கடந்து என்னை விட்டு போய்விடாதே என்று கெஞ்சினார். கர்த்தர் போக சொன்னால் நான் என்ன செய்யக்கூடும் என்றார். அன்று முதல் அவரின் தாயார் அவரை மிஷனெரி ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ஆகஸ்ட் மாதம்7ம் நாள் 1812 ரஷ்யாவில் உள்ள லுத்தரன் சபையில் குருப்பட்டம் கொடுக்கப்பட்டது.

மிஷனெரி பயணம்


14/02/1814 ரேணியஸ்ம் செனார் என்பவரும் சென்னைக்கு கப்பல் ஏறினர். 4/07/1814 சென்னை வந்தார் ரேணியஸ். தரங்கம்பாடி சென்று தமிழை கற்கத்தொடங்கினார். ஐந்தே மாதங்களுக்குள் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெருப்பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். பின்பு சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன்னில் குடியேறினார். தன் வீட்டின் பின்னே உள்ள விக்கிரகங்களை வணங்கும் மக்களுக்கு சுவீஷேச பணியை ஆரம்பித்தார். சிறுபிள்ளைகளுக்கென்று நற்செய்தி பணியை ஆரம்பிக்க ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார். ஞாயிற்றுக்கிழமைகளில் அதில் ஆராதனை நடத்தினார்.

மணவாழ்வு

ரேணியஸ் ஊழியத்தில் தனக்கு உதவியாய் இருக்க வான் சொமுரன் என்ற பக்தியுள்ள டச்சு குடும்பத்தை சார்ந்த ஆணி என்கிற பெண்ணை மார்ச் மாதம் 7ம் நாள் மணந்தார். ஆணி அம்மாள் ரேணியஸ்ன் திருப்பணியில் பங்கெடுத்து அவருக்கு உத்தம துணைவியாக விளங்கினார்.

ஊழியத்தின் பாதை

ரேணியஸ் மூன்று பள்ளிகளை ஆரம்பித்தார், அதில் இரண்டு பள்ளிகளில் தமிழிலே பாடங்கள் கற்ப்பிக்கப்பட்டன ஒருபள்ளியில் ஆங்கில மொழியில் கற்ப்பிக்கப்பட வழி செய்தார். தொடர்ந்து சென்ற இடங்களில் எல்லாம் பள்ளிகூடங்கள் நிறுவப்பட்டன. கிறுஸ்தவ ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக ஒரு போதனா முறை காலசாலையை அதாவது செமினேறி ஒன்றை துவக்கினார்.
மாணிக்கபுரம் பரி.திரித்துவ ஆலயம்


சோதனையின் பாதை

ரேணியஸ்ன் ஒன்றரை வயதே நிரப்பப்பட்ட குழந்தை திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தது, இந்த சூழ்நிலையில் கிறிஸ்துவுக்குள் தங்களை திடப்படுத்திக்கொண்டனர்.

திருநெல்வேலி வருகையும் கீழ்படிதலின் போதனையும்

CMS ஷ்டேன்னி குழுவினர் ரேணியஸ்ஐ நெல்லைக்கு அனுப்பினால் நலம் என்று எண்ணினர். ரேணியஸ் திருநெல்வேலியில் முதலாவது துவக்கிய பள்ளிக்கூடம் வண்ணாரபேட்டையில் நிறுவியதாகும். ஒரு செமினேரியில் உணவருந்தும் நேரத்தில் வந்த ரேணியஸ் சிலர் மட்டும் உட்க்கார்ந்திருப்பதை பார்த்து விவாதித்தார். ஜாதி வித்தியாசத்தை கண்டித்து பிரசங்கம் செய்தார். ஆயினும் மாணவர்களில் சிலர் நாங்கள் தனியாக உணவருந்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றனர். ரேணியஸ் நீங்கள் அனைவரும் போகலாம் செமினேறி முடிவடைந்தது என்றார். மேலும் சிலர் கேட்டுக்கொண்டதின் பேரில் வேற்றுமை ஒழிக்கப்பட்டது.

பெண்களுக்கான செமினேறி

ஆண்களை போலவே பெண்களுக்கும் செமினேறி ஒன்று நடத்தப்பட்டது. இதன் நோக்கம் நல்ல ஆசிரியைகளாக ஊழியருக்கேற்ற நல்ல மனைவிகளாக உத்தம தாய்மாராக விளங்க அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகும்.

திருநெல்வேலியின் அசைவு

திருநெல்வேலி நகரை கிறிஸ்துவுக்கு ஆதாயம் பண்ணிவிட வேண்டும் என்பது ரேணியஸ்ன் தீராத வாஞ்சை எனவே இந்துக்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பயன்பெறுவதற்கு எதுவாக ஞானஉபதேச வினா விடை ஒன்றை எழுதி வெளியிட்டார். கிறிஸ்தவர் அல்லாத ஆசிரியரும் அப்பாடத்தை பள்ளியில் கற்றுக்கொடுக்க கட்டளையிட்டார். மாற்கு துண்டுத்தாள் பிரசுர சங்கம் என்பதை நிறுவி அதன் மூலம் தேவையான பிரதிகளை எழுதிக் கொடுத்தார். பத்துக் கற்பனைகளுடன் ஆரம்பமாகும் அந்த வினாவிடைநூல் கடவுளுக்கு முன்பாக தங்களை பாவிகள் என்று உணர்த்தியது. அவருடைய இரத்தினாலே மட்டும் பாவ மன்னிப்புக் கிட்டும் என்று அறிந்தனர். இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்தானம் பெற முன்வந்தனர். நீண்ட சுற்றுப்பயணம்செய்து சுவிசேஷத்தை பிரசங்கித்ததின் விளைவாக சபைகள் பெருகின.

சபைகளின் உருவாக்கம்

ரேணியஸ் திருநெல்வேலி மாவட்டத்தில் 371 சபைகளை உருவாக்கினார். திருநெல்வேலிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் 107 ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்தார் 1825ம் வருடம்மட்டும் 3000 துக்கும் மேற்பட்டோர் சுமார் 90 கிராமங்களில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். 1827ல் புலியூர்குறிச்சி என்னும் கிராமத்தில் ஜெர்மனியில் இருந்த டோனாபிரபு என்பவரது நிதிஉதவியோடு ரேணியஸ் விலைக்கு வாங்கி அங்கே கிறிஸ்தவர்களை குடியேற்றினார். அந்த ஊர் டோனாவூர் என்ற பெயர் பெற்றது.

தோத்திர பண்டிகை

கிறிஸ்தவர்களாக மாறிய சில இந்து குடும்பத்தினர் சிலரின் பழக்கத்தின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் அமைந்திருக்கும் குரங்கனி குடைவிழாவில் கலந்துகொள்ளவதை தடுப்பதற்காக பாளையங்கோட்டையில் 1834ம் ஆண்டு ஜூலை 9ம் தேதியன்று மாம்பழ சங்கத்தை ஆரம்பித்தார் ரேணியஸ். இதன் மூலம்திருமண்டலத்தில் அணைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திர பண்டிகையாக வருடந்தோறும் பாளையங்கோட்டை நூற்றண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாபெரும் அப்போஸ்தலனின் முடிவின் காலம்
உயர்ந்த கருத்துக்களை தெளிந்த நடையில் உணர்த்தும் திறன் ரேணியஸ்’யிடம் அமைத்திருந்தது. இங்கிலாந்து திருச்சபையில் தாம் குறைகளாக கருதியவற்றை ஒரு நூலில் மதிப்புரைக்காக எழுதினர். ஏனெனில் சாதி அமைப்பு சபைகளுக்குள் இருந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை திருசபையினரால் பல எதிர்ப்புகளுக்கு ஆளான ரேணியஸ் ஐயர் 1835ம் வருடம் CMS (Church Mission Society) யிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் யாத்ரிகர் சங்கம் என்கிற சுவீஷே சங்கத்தை நிறுவி சுவீஷச்தை கிராமங்களில் பரப்பினார். ரேணியஸ் ஐயர் 1838 ம் ஆண்டு ஜூன் 5ம் தேதியன்று மரணமடைந்தார். அவரது உடல் அடைக்கலாபுரம் என்கிற ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இப்படிப்போல சுவிஷேச தாகத்தோடு எழும்பி புறப்பட ஆயத்தமாவோமா? இன்னும் கோடி கோடி இயேசுவை அறியாதோர் நம் தேசத்தில் உண்டே! பாரம் உண்டோ ஏக்கம் உண்டோ! எழும்பு சபையே! வாலிபனே! கன்னிகையே! இளவயதின் வாழ்வில் உள்ளவர்களே! வயது முதிர்ந்தவனே! வயது முதிர்ந்தவளே! எழும்பு கர்த்தருக்காய்!

(திருநெல்வேலி மாவட்டத்தில் தொண்டாற்றிய ஐரோப்பியத் திருத்தொண்டர்கள் பல கிராமங்கள்  உருவாக்கினர்.  அக் கிராமங்கள் நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் திட்டமிடப் பெற்றிருந்தன. மெஞ்ஞானபுரம், சாயர்புரம், சமாதான புரம், நாசரேத், அடைக்கலப்பட்டண,  மாணிக்கபுரம்  ஆகிய ஊர்கள். இவ்வூர்களை உருவாக்கியவர்கள் ரேணியஸ், ஜி.யு.போப், மர்காசியஸ்.)

ஆண்மையின்_தாய்மை


முதலிரவு முடிந்ததுமே
முகமெல்லாம் மலர்ந்தவனாய்
அப்பாவின் வாய்ப்புக்காய்
ஆவலுடன் பார்ப்பவனாய்
அவளோட அடிவயிற்றை
நாள்தோறும் வருடிவிட்டு
எப்போது என்குழந்தை
இவ்வுலகு வருமென்பான்
அப்பாடி அவனாசை
அவளைவிட பேராசை
நண்பர்க்கு விருந்தோம்பி
நவின்றிடுவான் அவனாசை
தாயாகிப் படுகின்ற
அவள்அவஸ்தை பார்ப்பதனால்
தன்னெஞ்சே வெடிப்பதுபோல்
தனிமையிலே அழுதிடுவான்
சுகமாகப் பிரசவித்தால்
கொஞ்சமாக அழுதிடுவான்
கத்திரித்துப் பிரசவித்தால்
கதறிகதறி அழுதிடுவான்
பெண்களுக்கு கண்குளத்தில்
வழியவழிய நீரிருக்கும்
ஆண்களுக்கு அதுகொஞ்சம்
ஆழமாகப் போயிருக்கும்
ஆணழுதால் மீன்போல
யாருக்கும் தெரிவதில்லை
பெண்ணழுதால் பிடித்துவைக்கப்
பாத்திரங்கள் போதவில்லை
கனிவாங்கிக் கனியாவான்
கடிவாங்கித் தாயாவான்
அவள்வலியைத் தான்வாங்கித்
தன்வலியாய் பாவிப்பான்
அவள்நடக்கும் பாதையெல்லாம்
இவன்கிடந்து பூவாவான்
அவள்கன்னம் தன்மார்பில்
தான்கிடத்தித் தாயாவான்

குழந்தையைத் தோள்மீதும்
மனைவியை மார்மீதும்
சுமக்கின்ற சுமைதாங்கி
அவனே அவர்களுக்கு**