முதலிரவு முடிந்ததுமே
முகமெல்லாம் மலர்ந்தவனாய்
அப்பாவின் வாய்ப்புக்காய்
ஆவலுடன் பார்ப்பவனாய்
முகமெல்லாம் மலர்ந்தவனாய்
அப்பாவின் வாய்ப்புக்காய்
ஆவலுடன் பார்ப்பவனாய்
அவளோட அடிவயிற்றை
நாள்தோறும் வருடிவிட்டு
எப்போது என்குழந்தை
இவ்வுலகு வருமென்பான்
நாள்தோறும் வருடிவிட்டு
எப்போது என்குழந்தை
இவ்வுலகு வருமென்பான்
அப்பாடி அவனாசை
அவளைவிட பேராசை
நண்பர்க்கு விருந்தோம்பி
நவின்றிடுவான் அவனாசை
அவளைவிட பேராசை
நண்பர்க்கு விருந்தோம்பி
நவின்றிடுவான் அவனாசை
தாயாகிப் படுகின்ற
அவள்அவஸ்தை பார்ப்பதனால்
தன்னெஞ்சே வெடிப்பதுபோல்
தனிமையிலே அழுதிடுவான்
அவள்அவஸ்தை பார்ப்பதனால்
தன்னெஞ்சே வெடிப்பதுபோல்
தனிமையிலே அழுதிடுவான்
சுகமாகப் பிரசவித்தால்
கொஞ்சமாக அழுதிடுவான்
கத்திரித்துப் பிரசவித்தால்
கதறிகதறி அழுதிடுவான்
கொஞ்சமாக அழுதிடுவான்
கத்திரித்துப் பிரசவித்தால்
கதறிகதறி அழுதிடுவான்
பெண்களுக்கு கண்குளத்தில்
வழியவழிய நீரிருக்கும்
ஆண்களுக்கு அதுகொஞ்சம்
ஆழமாகப் போயிருக்கும்
வழியவழிய நீரிருக்கும்
ஆண்களுக்கு அதுகொஞ்சம்
ஆழமாகப் போயிருக்கும்
ஆணழுதால் மீன்போல
யாருக்கும் தெரிவதில்லை
பெண்ணழுதால் பிடித்துவைக்கப்
பாத்திரங்கள் போதவில்லை
யாருக்கும் தெரிவதில்லை
பெண்ணழுதால் பிடித்துவைக்கப்
பாத்திரங்கள் போதவில்லை
கனிவாங்கிக் கனியாவான்
கடிவாங்கித் தாயாவான்
அவள்வலியைத் தான்வாங்கித்
தன்வலியாய் பாவிப்பான்
கடிவாங்கித் தாயாவான்
அவள்வலியைத் தான்வாங்கித்
தன்வலியாய் பாவிப்பான்
அவள்நடக்கும் பாதையெல்லாம்
இவன்கிடந்து பூவாவான்
அவள்கன்னம் தன்மார்பில்
தான்கிடத்தித் தாயாவான்
இவன்கிடந்து பூவாவான்
அவள்கன்னம் தன்மார்பில்
தான்கிடத்தித் தாயாவான்
குழந்தையைத் தோள்மீதும்
மனைவியை மார்மீதும்
சுமக்கின்ற சுமைதாங்கி
அவனே அவர்களுக்கு**
மனைவியை மார்மீதும்
சுமக்கின்ற சுமைதாங்கி
அவனே அவர்களுக்கு**
0 comments :
Post a Comment